“தமிழகத்தில்
பல மன்னர்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், சிறந்த ஆட்சி நிர்வாகத்தைக் கொடுத்த இராஜராஜ சோழனைத்தான் ‘பெருமன்னன்’ என
அழைக்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர் இராஜராஜ சோழன். அவரின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட இராஜராஜன் என்ற பெருமன்னனின் சதய விழாவைத் தமிழக அரசு நடத்துவதுடன், தமிழுக்குத் தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயரைச் சூட்ட வேண்டும். அவ்வாறு செய்வது பெருமன்னன் இராஜராஜ சோழனுக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும்.”
- திரு. ஆர்.
சுரேஷ்
குமார்,
சென்னை
உயர்
நீதிமன்ற
நீதிபதி