news-details
இந்திய செய்திகள்
வரிவிலக்குக் கிடையாது!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் வழங்கப்படும் சம்பளம் வருமான வரி விதிகளின் கீழ் வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 93 மறைமாவட்டங்கள் மற்றும் சபைகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பள்ளிகளில் பணிசெய்யும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தங்கள் வருமானத்தை முழுவதுமாகத் தங்கள் மறைமாவட்டத்திற்கும், சபைகளுக்கும் கொடுத்து விடுகின்றார்கள். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்யப்படுகின்றது. அதனால், வருமான வரிவிலக்குத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நவம்பர் 7 அன்று வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.