news-details
இந்திய செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு

மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நோட்டுப் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடிய ஸ்டேஷனரிக் கடைகளைத் தவிர வேறு எந்தப் பெட்டிக் கடைகளையும் அமைக்க அனுமதிக்கக்கூடாது. இதை முழுமையாகக் காவல்துறை கட்டுப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். இதற்காகப் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சி.பி.. அதிகாரி அடங்கிய சிறப்புக் குழுவை மத்திய-மாநில அரசுகள் நியமித்துக் கண்காணிக்க வேண்டும்.”                                                

- சென்னை உயர் நீதிமன்றம்