மதுரை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோணி பாப்புசாமியின் (75 வயது) பணி நிறைவை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி சவரிமுத்து அவர்களை நவம்பர் 4 முதல் மதுரை உயர் மறைமாவட்ட திருத்தூது நிர்வாகியாக நியமித்துள்ளார்.
திண்டுக்கல்
மறைமாவட்டம், மாரம்பாடியில் 01-10-1949 அன்று பிறந்த பேராயர் பாப்புசாமி, 07-07-1976 அன்று திருச்சி மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1998-இல் மதுரையின் துணை ஆயராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது ஆயர் பயணம் தொடங்கியது. 2003-ஆம் ஆண்டில் அவர் திண்டுக்கல்லின் முதல் ஆயரானார். 2014-இல் மதுரைப் பேராயராக உயர்ந்தார்.
பேராயர்
பாப்புசாமி அவர்கள் திரு அவையின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவராகவும்
(2018-2022), பாளையங்கோட்டை (2018-2019) மற்றும் குழித்துறை (2022-2024) ஆகிய மறைமாவட்டங்களுக்கான திருத்தூது நிர்வாகியாகவும் பணியாற்றியவர். புதிய நிர்வாகி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.