பத்திரிகையாளர்களுக்கு
எதிராகக் குற்றங்கள் இழைப்போர் தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்வது நிறுத்தப்பட வேண்டும் என ‘யுனெஸ்கோ’
அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு எதிரானக் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இன்னும் பல முயற்சிகளை எடுக்க
நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுப்பதாகவும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுத்து தண்டனை வழங்குவது, எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு முக்கிய நெம்புகோலாக அமையும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உண்மையை
எடுத்துரைத்ததற்காகவே
2022, 2023 -ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு நான்கு நாள்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் வீதம் கொல்லப்பட்டனர் என்றும், இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படுவது கிடையாது என்றும் தலைமை இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.