“மத்திய
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை. மணிப்பூரில் வன்முறை கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி இதுவரை அங்கு நேரில் செல்லவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.
மணிப்பூரில் வன்முறையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும். மிக முக்கியப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் இடம் நாடாளுமன்றம். ஆனால், நாடாளுமன்ற சனநாயகத்தை பா.ச.க.
மதிப்பதில்லை. பெரும்பான்மைகூட இல்லாத சூழ்நிலையில், இவர்கள் ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்கள்?”
- திருச்சி சிவா எம்.பி.,
மாநிலங்களவை
தி.மு.க.
குழுத்
தலைவர்