எள்ளளவும் ஏற்றம் தராமல் இரக்கமின்றி
கல்லான இதயமேந்தி கடுகளவும் கருணையின்றி
வரையறுத்து வதைக்கப்பட்டு வாடி நிற்கவைத்து
சிறைவைத்து சித்ரவதைக்குள்ளாக்கி மேல்குடி நானே!
உடல்நைந்தோர்
உள்ளம் உடைந்தோர் உருக்குலைந்தோராக்கி
மங்கையர்கள் மனம் நொந்து பேசாமடைந்தகளாக்கி
நலங்கொழிய வைத்து நற்சிந்தனை யின்றி கொல்வர்
தொடுகின்ற எண்ணமெல்லாம் தீதாய் ஓங்கி!
விடுகின்ற
மூச்செல்லாம் கொடுமைக் காற்றாய்
வில்லொத்த பார்வையில் கொள்ளித் தீயாய்
பாவச் சேற்றில் புழுவாய் நெளிவர்
இந்தக் காலத்தில் இருளான சூழலில்
மருந்தாக
விலங்கொடியாதோ விடுதலையொளி வாராதோ
எண்ணுவது உயர்வு ஏற்றமென்பதும் திண்ணம்
பெண்ணே நீயின்று பேறுபெற்றாயெனும் பேரொளி
கண்ணான எனதுருவாக்கம் இனிதாகத் தொடர்வாய்!
மண்ணுலகில்
மனிதம் தழைத்து ஓங்கிடவே
என்றுதித்தாய் இறைமகனே இருள் போக்கிடவே
அன்றலர்ந்த முல்லையாகக் கொள்ளை இன்பமானாய்
சுமையான துயரத்தைச் சுகமானதாக்கும் ஒளியானாய்!
விலங்கொடிக்கும்
விடுதலையாக வந்துதித்த வெளிச்சமே
எல்லையில்லா ஏற்றமிகு நம்பிக்கை தந்தாய்
வில்லாகத் தொடர்வோம் உமது வழியில்
ஆராரோ பாடி உறங்கவிடோம் உறங்கமாட்டோம்
உமது கனவு நிறைவேறும் நாள்வரைப் பயணிப்போம்!