news-details
கவிதை
பேராற்றலே பெண்டீர்!

ஒரு பெண்ணாக இருப்பது தெய்வீகப் பரிசு;

அவள் இதயம் மென்மையானது, ஆனாலும் வலிமையானது!

அருளுடனும் திடத்துடனும் அவள் உயர்ந்து நிற்கிறாள்;

ஆன்மாவில் தளர்ந்து போகாமல் அனைத்திலும்

                                வெற்றி கொள்கிறாள்!

அவளுடைய கருணை ஒரு நதியைப் போல பாய்கிறது;

இரக்கமும் ஞானமும் அவள் பக்கத்தில் நடக்கின்றன!

சோதனைகளில் தன்னை அவள் புடமிட்டுக் கொள்கிறாள்;

அன்பிலும் நம்பிக்கையிலும் அவளுடைய

                                பலம் காணப்படுகிறது!

அவள் ஒரு பெரும் சுடருடன் வழியை ஒளிரச் செய்கிறாள்;

இயற்கையின் ஆற்றல் அவள்; இதமான ஆன்மா அவள்!

ஒரு தாயாக, தலைவியாக, உண்மையுள்ள தோழியாக

அவள் செய்யும் அனைத்திலும் நேர்த்தியும்

                                அக்கறையும் கொள்கிறாள்!

அவள் குடும்பத்தின், சமூகத்தின் முதுகெலும்பு;

அவள் மரபு, நீண்ட வரலாறாய் எதிரொலிக்கிறது!

கடும் போராட்டங்களால் அவள் மேலே உயர்ந்தவள்;

அவளுடைய நம்பிக்கை ஆழம் கொண்டது!

                                உள்ளம் அன்பு கொண்டது!

வலிகளால் அவள் பயணம் செதுக்கப்பட்டது;

ஆனாலும் மகிழ்வோடு வாழ்வைத் தழுவிக் கொண்டவள்!

அவளுடைய ஆற்றல் வானமளவு; அசைவு பூமியளவு;

அவளே ஆற்றல்; அவளே விடியல்;

                                புதியன காட்டும் வைகறை வானம்!