ஒரு பெண்ணாக இருப்பது தெய்வீகப் பரிசு;
அவள்
இதயம் மென்மையானது, ஆனாலும் வலிமையானது!
அருளுடனும்
திடத்துடனும் அவள் உயர்ந்து நிற்கிறாள்;
ஆன்மாவில்
தளர்ந்து போகாமல் அனைத்திலும்
வெற்றி கொள்கிறாள்!
அவளுடைய
கருணை ஒரு நதியைப் போல பாய்கிறது;
இரக்கமும்
ஞானமும் அவள் பக்கத்தில் நடக்கின்றன!
சோதனைகளில்
தன்னை அவள் புடமிட்டுக் கொள்கிறாள்;
அன்பிலும்
நம்பிக்கையிலும் அவளுடைய
பலம் காணப்படுகிறது!
அவள்
ஒரு பெரும் சுடருடன் வழியை ஒளிரச் செய்கிறாள்;
இயற்கையின்
ஆற்றல் அவள்; இதமான ஆன்மா அவள்!
ஒரு
தாயாக, தலைவியாக, உண்மையுள்ள தோழியாக
அவள்
செய்யும் அனைத்திலும் நேர்த்தியும்
அக்கறையும் கொள்கிறாள்!
அவள்
குடும்பத்தின், சமூகத்தின் முதுகெலும்பு;
அவள்
மரபு, நீண்ட வரலாறாய் எதிரொலிக்கிறது!
கடும்
போராட்டங்களால் அவள் மேலே உயர்ந்தவள்;
அவளுடைய
நம்பிக்கை ஆழம் கொண்டது!
உள்ளம் அன்பு கொண்டது!
வலிகளால்
அவள் பயணம் செதுக்கப்பட்டது;
ஆனாலும்
மகிழ்வோடு வாழ்வைத் தழுவிக் கொண்டவள்!
அவளுடைய
ஆற்றல் வானமளவு; அசைவு பூமியளவு;
அவளே
ஆற்றல்; அவளே விடியல்;
புதியன காட்டும் வைகறை வானம்!