news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (16.03.2025)

காயமடைந்த குடும்பத்தின் வலியைக் குணப்படுத்த சிறந்த மருந்து மன்னிப்பு. மன்னிப்பு என்பது மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும்.”

- மார்ச் 4, திருத்தந்தையின் மார்ச் மாத செபக் கருத்து

இயற்கையை நமது பேராசை சுரண்டலில் இருந்து விடுவிப்பதற்காக, நாம் அனைவரும் நமது நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றுவோம்.”

- மார்ச் 5, பிரேசில் நாட்டு மக்களுக்கு அனுப்பிய கடிதம்

புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்... இவர்கள் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையின் வழியாக எதிர்நோக்கின் சான்றுகளாகத் திகழ்கின்றார்கள்.”

- மார்ச் 3, திருத்தந்தையின் குறுஞ்செய்தி

வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நமது உறுதிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அச்சங்களில் நிலைத்து நிற்காமல் இருக்கவும், அறிவியலின் குரலுக்குச் செவிசாய்ப்பது அவசியமாகிறது.”

- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி

நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு. எதிர்நோக்கு ஒருபோதும் நமக்கு ஏமாற்றத்தைத் தருவதற்காகக் காத்திருப்பதில்லை.”

- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவைக்கு வழங்கிய செய்தி