“காயமடைந்த குடும்பத்தின் வலியைக் குணப்படுத்த சிறந்த மருந்து மன்னிப்பு. மன்னிப்பு என்பது மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும்.”
- மார்ச் 4, திருத்தந்தையின்
மார்ச்
மாத
செபக்
கருத்து
“இயற்கையை நமது பேராசை சுரண்டலில் இருந்து விடுவிப்பதற்காக, நாம் அனைவரும் நமது நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றுவோம்.”
- மார்ச் 5, பிரேசில் நாட்டு
மக்களுக்கு
அனுப்பிய
கடிதம்
“புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்... இவர்கள் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையின் வழியாக எதிர்நோக்கின் சான்றுகளாகத் திகழ்கின்றார்கள்.”
- மார்ச் 3, திருத்தந்தையின்
குறுஞ்செய்தி
“வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நமது உறுதிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அச்சங்களில் நிலைத்து நிற்காமல் இருக்கவும், அறிவியலின் குரலுக்குச் செவிசாய்ப்பது அவசியமாகிறது.”
- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின்
பொதுப்பேரவை
உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்ட
செய்தி
“நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு. எதிர்நோக்கு ஒருபோதும் நமக்கு ஏமாற்றத்தைத் தருவதற்காகக் காத்திருப்பதில்லை.”
- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின்
பொதுப்பேரவைக்கு வழங்கிய செய்தி