“சாம்பல் நாம் என்னவாக இருக்கிறோம் என்ற நினைவை நம்மில் புதுப்பிக்கிறது, அதேவேளையில், நாம் என்னவாக இருப்போம் என்ற நம்பிக்கையையும் நம்மில் உருவாக்குகிறது.”
- மார்ச் 05, திருநீற்றுப்
புதன் மறையுரை
“கிறிஸ்துவின்
மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, நாம் மனத்தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் தவக்காலத்தின்
வழியாகப் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.”
- மார்ச் 05, திருநீற்றுப்
புதன் மறையுரை
“நாம்
வாழ்கின்ற சமூகம், சந்தைக் கருத்தியல்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. தனிநபர் இலாபம்
மற்றும் பலன்களை எதிர்பார்த்துப் பணியாற்றும் இச்சமூகத்தில் தன்னார்வலர்களின் பணியானது
எதிர்நோக்கின் அடையாளமாகவும், இறைவாக்காகவும் இருக்கின்றது.”
- மார்ச் 09, மூவேளைச்
செப உரை
“சோதனைக்கு
உட்படுத்தப்படும்போது நாம் தனியாக இல்லை; பாலைவனத்தின் வழியாக, வாழ்க்கைக்கான பாதையைக்
காட்டும் இயேசு நம்முடன் இருக்கின்றார்.”
- மார்ச் 09, யூபிலி
திருப்பலி மறையுரை
“இறைமகன்
இயேசு பாலைவனத்திற்குச் செல்வது அவர் எத்துணை துணிச்சல் நிறைந்தவர் என்பதை நிரூபிப்பதற்காக
அல்ல; மாறாக, அவர் எவ்வளவு வலிமையானவர் என்பதை நிரூபிப்பதற்காக.”
- மார்ச் 09, யூபிலி
திருப்பலி மறையுரை