news-details
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 3:1-8,13-15; 1கொரி 10:1-6,10-12; லூக் 13:1-9 (மார்ச் 23, 2025)

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் மூன்றாம் வாரம்மனமாற்றம் பெற்று கனி கொடுத்து வாழநமக்கு அழைப்பு விடுக்கிறது. உலக ஆசைகளுக்கும் பணத்திற்கும் தேவையற்ற பெருமைகளுக்கும் தகாத உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல், பிறர் குற்றங்களைப் பெரிதுபடுத்தி அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி  வாழும் நமக்கு மாற்றம் தேவை. அழிவை நோக்கிச் செல்லும் வாழ்வை அலசிப் பார்த்து, பொய்மையிலிருந்து மெய்மைக்கும் அழிவிலிருந்து வாழ்வுக்கும் எதிர்மறை எண்ணத்திலிருந்து நேர்மறை எண்ணத்திற்கும் கடந்து செல்வோம். ‘மனம் மாறாவிட்டால் அழிந்துவிடுவீர்கள்என்கிறது நற்செய்தி வாசகம். மற்றவர்களை மாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டாம். நமது வாழ்வை மாற்றி புதுவாழ்வு வாழ பெருமுயற்சி எடுப்போம். அன்பு, கருணை, இரக்கம், பொறுமை, மகிழ்ச்சி, மன்னித்தல் என்ற ஏராளமான கனிகளை ஆண்டவர் நமக்குக் கொடுத்து, அன்றாடம் நம்மை வாழ்வித்துக்கொண்டே இருக்கிறார். அத்தி மரத்தைப் போன்று இறைவன் பல வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அத்திமரத்தில் இலைகள் இருந்தன, கனிகள் இல்லை. நம்மிடம் வாழ்க்கை இருக்கிறது, ஆனால், கனிகள் இல்லைஎன்றாவது கனி கொடுப்பார்கள் என்று இறைவன் பொறுமையாக இருக்கிறார்பல மடங்கு கனி கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஒரேபு மலையில் மோசேவை இறைவன் தம் பணிக்காக அழைக்கிறார். இஸ்ரயேல் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுதலை வாழ்வுக்கும், துன்பத்திலிருந்து மகிழ்ச்சியான வாழ்வுக்கும், எகிப்தியரின் பிடியிலிருந்து புதுவாழ்வுக்கும், இறுதியாக பாலும் தேனும் பொழியும் கானா நாட்டிற்கு மோசே வழியாக அழைத்து வருகிறார். இறைவனின் வழிநடத்துதலை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் முன்னோர் அனைவரும் மேகத்தின் கீழ் இறைப்பராமரிப்பில் வழிநடந்தனர். ஆனாலும் இறைவன் உடனிருந்ததை அவர்கள் உணரவில்லை. முணுமுணுத்தனர், கடவுளை விட்டு விலகினர்இயேசு தம்முடைய உயிரை நமக்காகக் கொடுத்து, நம் அனைவருக்கும் புதுவாழ்வு கொடுத்து காத்து வருகிறார். அன்றாடம் நம்மோடு பயணிக்கும் இறைவனின் மகத்துவத்தை உணர்ந்து, பாவமின்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே எம் இறைவா! திரு அவையை வழிநடத்துவதற்கு நீர் கொடுத்த தலைவர்களுக்காய் நன்றி கூறுகின்றோம். அவர்கள் எங்களுக்குக் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடக்கவும், அவர்களோடு இணைந்து செயல்பட்டு பங்கு என்ற குட்டித் திருச்சபையை வளர்த்தெடுக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் எமக்கு வழியாக, வாழ்வாக இருந்து  அற்புதமாக வழிநடத்தி வருகின்றீர், நன்றி கூறுகின்றோம். எங்களது பலவீனங்களால் பலமுறை உமது அன்பை உணராமல் இருந்திருக்கின்றோம். எங்களை மன்னியும். நாங்களும் எங்கள் குடும்பங்களும் உம்மை விட்டுப் பிரியாது உமது அன்பில் நிலைத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாசமுள்ள ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். பெற்றோர்களாகிய நாங்கள் பக்தியிலும் ஞானத்திலும் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை வளர்க்கவும், திருப்பலியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி ஆர்வத்தோடு பங்குகொள்ளத் தூண்டவும், திருமறையின் முக்கியத்துவத்தை விளக்கும் மறைக்கல்வி வகுப்பிற்குத் தவறாமல் அனுப்பவும் தேவையான அருள் வரங்களை எமக்குத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் ஆண்டவரே! இப்புனிதமான நாள்களில் உடன் வாழும் அனைவருக்கும் உதவி செய்து வாழவும், வாழ்வு தரக்கூடிய வார்த்தைகளைப் பேசவும்எவரையும் தீர்ப்பிடாது தூய வாழ்வு வாழவும், குடும்பத்தில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொண்டு மகிழ்வோடு வாழவும் தேவையான அருள்வரத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.