உறவுச் சமூகங்களைக் கட்டியெழுப்புபவள் பெண்; இப்பூமிப்பந்தை அன்பிலும் அறிவிலும் உறவிலும் வாழ்விலும் வளப்படுத்துபவளும் அவளே. அப்பெண்ணின் பெருமையைப் போற்றும் இந்நாளில் மகளிர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்!
ஆண்டுக்கு
ஒருமுறை அல்ல, அன்றாடம் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டிய உறவு பெண்ணினம். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’ என்னும் பாரதியின் வைர வரிகள் உயிர்பெற்றெழும் இச்சூழலில், பட்டங்கள் ஆள்வதில் பார்போற்ற உயர்ந்து வரும் பெண் சமுதாயம், சட்டங்கள் செய்வதிலும் மேன்மை கண்டிட அவர்களின்
திறமையை அறிந்து, பெருமையைப் பகிர்ந்து, தடங்கள் பதித்திட வாழ்த்திடும் நன்னாளே இப்பொன்னாள்!
பெண்ணிய
விடுதலையை முன்வைத்து, அவள் கொண்ட அடிமை இருள் போக்க, ஆண்-பெண் சமத்துவச் சமுதாயத்தைப் படைக்க, ஓங்கி ஒலித்ததே இந்த வரிகள். பெண் விடுதலையே சமூக விடுதலை; பெண் விடுதலையே நாட்டு விடுதலை; பெண் விடுதலையே மானுட விடுதலை என முழங்கிய இந்த
வரிகள், பெண்-சமூகத்தின் கண் எனவும், பெண் சக்தி கொண்டவள் எனவும் பறைசாற்றின. ஆகவேதான், கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை, ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!’ என்று பாடினார். பெண்மையின் பெருமை கண்ட பாரதி...
‘பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை
வெல்க என்று கூத்திடு வோமடா!
துன்பம்
தீர்வது பெண்மயி னாளடா!
சூரப்
பிள்ளைகள் தாயென்று போற்றுவோமடா!
பெண்ண
றத்தினை ஆண் மக்கள் வீரந்தான்
பேணு
மாய்ற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக்
காக்கும் இரண்டிமை போலவே
காத
லின்பத்தைக் காத்திடு வோமடா!
உயிரைக்
காக்கும், உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக்
குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு
னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊதுக்கொம்புகள்;
ஆடு களி கொண்டே!
‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’ என்று பொற்குழ லூதடா!
அன்ன
மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆனை
காட்டில் அனலை விழுங்குவோம்!
என்று
பெண்மையின் பெருமையை ‘போற்றி தாய்’ எனப் பாடினான். உயிர்களை உருவாக்கி, நல்வழிப்படுத்தி உலகை மேன்மையுறச் செய்வதே பெண்ணுக்குரிய அறம் என்றும், வாழ்வில் இன்பத்தைப் பெருக்கி உலகை உய்விப்பதுதான் பெண்மையின் மேன்மை எனவும் கண்டு ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்று
பரவசம் பொங்கப் பாடினான் அந்த முண்டாசுக் கவிஞன்.
“பெண் - மகளாகத் தோன்றி, மனைவியாக வாழ்ந்து, தாயாகத் தொண்டு செய்து, தெய்வமாகக் காட்சி தருபவள்” என்றார் திரு.வி.க. பெண்ணின்
ஏழு வகைப் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் எனும் வளர் பருவ நிலைகளில் எந்த நிலையில் இருந்தாலும், தாயாகவும் தாய்மையாகவும் பார்க்கப்படுகிறாள். தான் பெற்ற குழந்தையில் தன் தாயைப் பார்க்கும் சமூகம் இது; பெண்மையின்
தாய்மைக்கு உலகில் ஈடு இணையில்லை.
உலகத்தின்
எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல்லாடல் ‘அம்மா’ என்பதுதான். உலகைப் படைத்த இறைவன் எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களிலும் உடனிருக்கவே தாயைப் படைத்தான் என்பது சீனப் பழமொழி. ஆகவே, தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் அல்ல; தாயும் தெய்வமும் ஒன்றே! இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய தாயில் தரிசனம் தருகிறார்.
அன்பின்
அழகுதான் உண்மையிலேயே அழகு; அது தாய்மையில் பொதிந்து கிடப்பதால்தான் பெண் அழகுள்ளவளானாள். தாய் அன்பின் வடிவம். ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சியை எங்கேனும் நாம் கண்டால், அங்கே நாம் உண்மையான அன்பின் வடிவத்தைக் கண்டுகொள்கிறோம்.
தாயை
வேறு எந்த மொழியிலும் விளக்கினாலும் கிடைக்காத உள்பொருள் தமிழில் ‘அம்மா’ என அழைக்கும்போது ஆழமாகப்
பொருள்படுகிறது. தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்த பின்பு அதை உலகத்தில் உயிர் மெய்யாய் உலவ விடுகிறாள். இப்பேருண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் குவிந்து ‘அம்மா’ என அழைக்கப்படுகிறாள் என்கிறது தமிழ்
மரபு.
உலகில்
தாய் அன்புக்கு ஈடு இணையில்லை; தாய் அன்பு கலப்படமற்ற அன்பு. நிறைவான அன்பையும் தன்னலமற்ற உணர்வையும், பிறர் நலம் கொண்ட உழைப்பையும் தாய் ஒருவரிடம் மட்டுமே நாம் காண முடியும்.
“மேலை நாடுகளில் பெண் ஒருவரால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள் தன் முழு வாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்” என்கிறார்
சுவாமி விவேகானந்தர். அவ்வாறே, “என்னுடைய எல்லா நல்ல குணங்களுக்கும் நான் என் தாய்க்குக் கடன்பட்டவன்” என்கிறார்
ஆபிரகாம் லிங்கன்.
பூ
- அரும்பாகி, மலராகி, கனியாய்க் கனிவது போல் பெண்ணுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என மூன்று நிலைகள்
இருக்கின்றன. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும் என்கிறது சமூகம். சாலையோரம் கிடைக்கும் ஒரு கல்லுக்கு மதிப்பொன்றும்
இல்லை; ஆனால், அது ஒரு சிற்பியின் கையில் பட்டு அழகுச் சிலையாகும்போது அதற்குத் தனி மரியாதை இருக்கிறது. அச்சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. பெண்ணும் ஒரு கல்லைப் போன்றவளே. மங்கையாக அவள் மணம் முடிக்கின்றபோது, இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாகச் செதுக்கப்படுகிறாள்; அங்குத் தாயாகும்போது குடும்பம் என்னும் கோவிலின் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகிறாள்.
உலகத்தின்
எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட துறக்க முடியாத உறவு தாயின் உறவு என்பார்கள். ஒரு துறவியை அவரைப் பெற்ற தந்தையைச் சந்திக்க நேர்ந்தால் தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்றும் ஆனால், தாய் சந்திக்க நேர்ந்தால் துறவி அவருடைய திருவடிகளில் விழுந்து தொழ வேண்டும் என்பதும் சில மதங்களில் மரபு. தந்தைக்கு இல்லாத மதிப்பை இந்தச் சமூகம் தாய்க்குத் தந்திருக்கிறது.
‘தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்றார்
நபிகள் நாயகம். ‘அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்’
என்கிறது சீராக்கின் ஞான நூல் (3:4). ஆகவேதான், ‘ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களில் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணிப்பது’ என்கிறது
திருக்குர்-ஆன்.
இன்று
பெண்மை வஞ்சிக்கப்படுகிறது; உதாசீனப்படுத்தப்படுகிறது; புறந்தள்ளப்படுகிறது; பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறது. பெண்ணியம் மாண்பு பேணப்படப் போதிய சட்ட திட்டங்கள் இருந்தபோதிலும், குற்றங்களுக்கான தண்டனைகள் தீவிரப்படுத்தப்படாத வரையிலும் ஆயிரம் பாரதிகள் பிறந்தாலும் சமத்துவம் காண்பது சவாலே! அது பெரும் சவாலே!
பாலியல்
ரீதியாகப் பெண்மை சீண்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்; அன்னையர்கள் அனாதையாவதைச் சமூகம் தடுக்க வேண்டும்.
“எங்கள் வீட்டின் பெயர்
‘அன்னை இல்லம்’
அன்னை
இருப்பதோ அனாதை இல்லம்”
என்னும்
புதுக்கவிதை, இன்றைய உறவுச் சமூகத்தின் அவலத்தை எடுத்துக் கூறுகிறது.
தாயைப்
போற்றுவோம்; அவள் கொண்ட தாய்மையைப் புகழ்வோம்; அவளின் பெண்மையின் பெருமையைப் பறைசாற்றுவோம். இவ்வேளையில்,
‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை
வணங்காமல் உயர்வில்லையே!’
என்னும்
வாலியின் வைர வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. பெண்மை வாழ்கவே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்