“செபத்தில் மூழ்கி, இறை ஒளியால் நிறைந்து, உருமாற்றம் அடைந்த இயேசு, தமது செயல்களின் வழியாக நமக்குத் தமது எல்லையற்ற அன்பின் ஒளியைக் காட்டுகின்றார்.”
- மார்ச் 16, மூவேளைச்
செபவுரை
“இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். துன்ப நேரங்களில் தமது அன்பின் ஒளிக்கதிரைப் பிரதிபலிக்கும் மக்களை நம் அருகில் வைப்பார்.”
- மார்ச் 16, மூவேளைச் செபவுரை
“போர் என்பது சமுதாயங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வருவதால் உடன்பிறந்த உணர்வு, நீதி, எதிர்நோக்கு மற்றும் அமைதிக்கான ஆவல் நம்மில் எழுப்பப்பட வேண்டும்.”
- மார்ச் 18,
Luciano Fontana
என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி
“போர் என்பது முட்டாள்தனமானது. எது வாழ்வைக் கொணரும், எது வாழ்வைக் கொல்லும்? என்ற உண்மையை நாம் அறிந்து, தனியாகவோ அல்லது சமூகமாகவோ எடுக்கும் பாதை குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும்.”
- மார்ச் 18, Luciano
Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள
செய்தி
“வார்த்தைகள் என்பவை மனித குலத்தின் சூழலை வடிவமைப்பவை. அவை இணைக்கவும் பிரிக்கவும் ஆற்றல் பெற்றவை; எனவே, முதலில் வார்த்தைகளிலிருந்தும் நம் மனங்களிலிருந்தும், பின்னர் உலகிலிருந்தும் ஆயுதங்களைத் தவிர்த்திட முயற்சிக்க வேண்டும்.”
- மார்ச் 18, Luciano Fontana
என்பவருக்கு
அனுப்பியுள்ள
செய்தி