news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (26.01.2025)

எதிர்நோக்கு என்பது இறையியல் பண்பு, இலத்தீன் மொழியில்விர்த்தூஸ்அதாவதுவலிமைஎன்னும் பொருள்படுகின்றது. அது பண்பு நலன் அல்ல; மாறாக, எதிர்நோக்கு என்பது இறைவனிடமிருந்து வரக்கூடிய ஓர் ஆற்றல் 

- ஜனவரி 11, யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரையின் முதல் கூட்டத்தின் உரை

தாழ்ச்சியின் வழியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து, நமக்கான புதிய வழிகளைத் திறக்கின்றார், புதிய பாதைகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார்.” 

- ஜனவரி 11, குறுஞ்செய்தி

குழந்தைகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய கொடை; நம்பிக்கையின் பரிசு, குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்; நல்ல சூழ்நிலையை உணர வேண்டும்.”

- ஜனவரி 12, வத்திக்கான்  நிகழ்வு

இயேசு வழியாக இறைத்தந்தை தமது முகத்தை இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுத்தினார். மனிதகுலத்துடனான உரையாடல் மற்றும் உறவிற்குள் நுழைவதற்கான சிறப்புமிக்க இடத்தைக் கடவுள் நிறுவுகிறார்.”

- ஜனவரி 12, மூவேளைச் செப உரை

மனிதர்களாகவும் அரசியல் சமூகங்களாகவும் நம்மை இணைத்து வைத்திருக்கும் உறவுகள் குறித்து நாம் மீண்டும் எண்ணிப் பார்ப்பதற்கு இந்த யூபிலி ஆண்டு கிறித்தவர்களுக்கும் கிறித்தவரல்லாதவர்களுக்கும் ஏற்ற வாய்ப்பை வழங்குவதாக அமையட்டும்.”

- ஜனவரி 14, ‘எக்ஸ்தளப்பதிவு