திருத்தந்தை பிரான்சிஸ் முதன்முறையாக ஒரு பெண் துறவியைத் திருப்பீடத் துறையின் தலைவராக நியமித்துள்ளார். கொன்சலாத்தா துறவு சபையைச் சேர்ந்த இத்தாலிய அருள்சகோதரி Simona Oramoilla அவர்கள் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புகளுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011 -ஆம் ஆண்டில் கொன்சலாத்தா துறவு சபையின் தலைவியாகப் பணியாற்றி, 2023 அக்டோபரில் திருப்பீடத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் திரு அவையில் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் துறவி என்ற பெயரைப் பெறுகிறார்.