news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (12.01.2025)

மாசில்லாக் குழந்தைகள் அனைவருக்காகவும் செபிப்போம். பசி, போர், வன்முறை இவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவரும் பாதுகாக்கப்படவும் ஆதரிக்கப்படவும் இறைவனின் உதவியைக் கேட்போம்.”

டிசம்பர் 28, மாசில்லாக் குழந்தைகள் திருவிழா குறுஞ்செய்தி

எதிர்நோக்கு மற்றும் இரக்கச் செயல்கள் நிறைந்த உலகம் அழகானது; எதிர்நோக்கு மற்றும் இரக்கச் செயல்கள் நற்செய்தியின் இதயத்தைத் தொட்டு, நல்வாழ்விற்கு வழிகாட்டும் வழியைச் சுட்டிக்காட்டுகின்றன,.”

-   டிசம்பர் 28, BBC செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தி

குடும்பம் என்பது சமூகத்தின் உயிரணு. அது ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய  விலைமதிப்பற்ற புதையல்.”

-   டிசம்பர் 29,  மூவேளைச் செப உரை

கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் நாமும் இடையர்களைப்போல அவர் அருகில் செல்வோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டுவருவோம். கடவுளால் அன்பு செய்யப்படுதலே உண்மையான அழகு என்பதை உணர்வோம்.

- டிசம்பர் 30, திருத்தந்தையின் குறுஞ்செய்தி

இறைவனின் தாயான மரியா இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்துகின்றார். நம்மை அவரிடம் மீண்டும் கொண்டு சேர்க்கின்றார். அவரைப்பற்றி நம்மிடம் எடுத்துரைத்து, அவரிடமே நம்மை அழைத்துச் செல்கின்றார்.”

- ஜனவரி 1, ‘கன்னி மரியா இறைவனின் தாய்பெருவிழா மறையுரை