news-details
உலக செய்திகள்
புனிதக் கதவு வழியாக ஐந்து இலட்சம் பேர் கடந்து சென்றனர்!

வத்திக்கானில் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக கடந்த இரு வாரங்களில் 5,45,532 பேர் கடந்து சென்றதாக யூபிலி ஆண்டிற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 24-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் புனிதக் கதவைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது திருப்பயணிகள் ஆர்வத்துடன் புனிதக் கதவுக்குள் நுழைந்தனர். அவ்வாறே, ஜனவரி 5 -ஆம் தேதி புனித பவுல் பெருங்கோவிலின் புனித கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உரோம் நகரின் நான்கு பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் வழியாகத் திருப்பயணிகள் சென்று பலனடைந்து வருகின்றனர்.