news-details
தமிழக செய்திகள்
தமிழ்நாடு திரு அவைக்கான இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) - மேய்ப்புப் பணித் திட்டம் (MISSION) குறித்த விளக்கக் கூட்டம்

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI) வெளியிட்டுள்ள MISSION-2033 என்ற மேய்ப்புப் பணித் திட்டத்தை தமிழ்நாடு திரு அவைக்கு எடுத் துச் செல்வதற்கான வழிகாட்டுதல் கூட்டம் டிசம்பர் 12, 2024 அன்று மதுரை, கரடிப்பட்டியிலுள்ள PILLAR மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் பொதுச் செயலரும் கோட்டாறு மறைமாவட்ட ஆயருமான மேதகு நசரேன் சூசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பணிக்குழுக்களின் மாநிலச் செயலாளர்கள், மறைமாவட்ட மேய்ப்புப்பணி மைய இயக்குநர்கள் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆயர் பேரவையின் இணைச்செயலரும், CCBI-இன் தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைப்பாளருமான (RDS) அருள்முனைவர் பிரான்சிஸ் ஜோசப் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்தார். கருத்துரையாளராக அருள்பணி. ஜோ சேவியர் சே.. திட்டம் குறித்த அறிமுகம் மற்றும் விளக்கங்களை இரு கருத்தமர்வுகளில் சிறப்பாக  விளக்கினார். பிற்பகலில் குழு ஆய்வும், தொடர்ச்சியாகக் குழு ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டுக் கருத்துகள் கூர்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பணிக்குழுவின் மாநிலச் செயலரும், அவருடைய பணிக்குழுவைச் சார்ந்த மறைமாவட்டச் செயலர்களை உள்ளடக்கி வரும் பிப்ரவரி 28, 2025-க்குள் Mission-2033-இன் கருத்துப் பரவலாக்கக் கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் மாநிலச் செயலாளர் அருள்பணி. பெனடிக்ட் பர்னபாஸ் நன்றி கூறினார்.