news-details
இந்திய செய்திகள்
உயிருள்ள மருத்துவமனையாக!

திரு அவை வளர வேண்டுமானால் குரலற்றவர்களின் குரலையும், விளிம்புநிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் அணுக வேண்டும்என்று இந்திய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட், சீரோ-மலபார் திரு அவை ஆயர்களின் கூட்டமைப்பில் தனது முதல் உரையில் கூறியுள்ளார். மேலும், திரு அவை போர்க்களத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் மருத்துவமனையாக மாற வேண்டும் என்று கூறினார். இந்த உரை கேரளாவில் நடைபெறும் திருவழிபாடு பிரச்சினையின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.