news-details
சிறுகதை
காவல் அன்னை (புதிய தொடர்கதை)

1) பிறந்த நாள் விழா

என்ன யாழினி, அந்தக் கேன்சர் பேசண்டை செக்கப் பண்ணீட்டீங்களா?” என்று கேட்டார் டாக்டர் சேவியர். “பார்த்திட்டேன் டாக்டர், வலி அதிகமாய் இருக்குன்னு கத்தினார். அதற்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்திட்டு வந்தேன்என்றாள் யாழினி.

ஓகே, நாலாவது ப்ளோரில் அந்த அல்சர் பேசண்டும் வலிக்குதுன்னு சொன்னார். கொஞ்சம் அவரையும் போய் பார்த்திட்டு வாங்கஎன்றார் சேவியர்.

இந்தா போயிட்டு வாரேன் டாக்டர்என்றாள் யாழினி.

பேசண்டை விசிட் பண்ணிட்டு இங்கே வாங்க, நம்ப இஸ்மாயிலும் இங்கே வருவார், வந்ததும் நாம் பேசலாம்என்றார் சேவியர்.

ஓகே சார், போய் பார்த்திட்டு உங்கள்ட்டேயே திரும்பி வாரேன்என்று பறந்தாள் யாழினி.

சென்னை நுங்கம்பாக்கத்தில்மெரிட் ஆஸ்பத்திரிபேர் பெற்றது. ஆறு மாடியில் இரவு பகலாய் சுறுசுறுப்பாய் இயங்கும் மருத்துவமனை இது. இதில் எல்லா நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும். அருகிலுள்ள பகுதியிலிருந்து மக்கள் காலை முதல் சிகிச்சைக்காக வரத் தொடங்கி விடுவார்கள்.

இங்கு கேன்சர், இதய நோய், தோல் வியாதி, கண் நோய், பல் மாற்று என்று அனைத்து நோய்களுக்குமான டாக்டர்கள் நிறையப் பேர் உண்டு. மொத்தம் இங்கே எழுபது மருத்துவர்களும் இருநூறு நர்சுகளும் பணியாற்றுகிறார்கள். இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் டாக்டர் இஸ்மாயில். இவரின் மனைவி டாக்டர் பாத்திமாவும் இங்கேதான் வேலை செய்கிறார்.

இந்த மருத்துவமனை உள்ளேயே கேன்டீன், மருந்துகள் வாங்குவதற்குமெடிக்கல் ஷாப்எல்லாம் உண்டு. சுற்றிலும் உள்ள மரத்தடியில் அமர்ந்து வந்து செல்வோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

வாங்க யாழினி, உட்காருங்க. இஸ்மாயில் இப்ப வந்திருவார்என்றார் சேவியர்.

எதுவும் முக்கியமான விசயமா டாக்டர்?” என்றாள் யாழினி சிரித்தபடி.

இஸ்மாயில் வரவும் சொல்றேன். என்னோட பெர்சனல் மேட்டர்தான், ஆஸ்பிடல் சம்பந்தமானது இல்ல யாழினிஎன்று சிரித்தார் சேவியர்.

அப்பொழுது இஸ்மாயில் உள்ளே நுழைந்து விட்டார்.

உட்காருங்க டாக்டர்என்றாள் யாழினி.

என்ன சேவியர், எதற்கு என்னை வரச் சொன்னாய்?” என்று சிரித்தபடி கேட்டார் இஸ்மாயில்.

டீ சாப்பிட்டே பேசலாம்என்று பெல்லை அழுத்தி நர்சிடம் டீ கொண்டு வரச் சொன்னார் சேவியர்.

டீயும் வந்தது. குடித்தபடியேவிசயத்தைச் சொல்லுப்பா சேவியர், வேலை நிறைய இருக்குஎன்றார் டாக்டர் இஸ்மாயில்.

ஏய், இந்தப் பெரிய ஆஸ்பத்திரிக்கு தலைவர், ஓனர்னா வேலை கொஞ்சமாகவா இருக்கும்? வேலை தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்கும். நாம் கொஞ்சம்  ப்ரீயா பேசலாமே? என்ன டாக்டர் யாழினிஎன்று சிரித்தார் சேவியர்.

நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்ச நண்பர்கள். இதிலே நான் என்ன சொல்ல முடியும் டாக்டர்என்றாள் யாழினி.

ஓகே. நான் மேட்டரை சொல்றேன். வேற ஒண்ணுமில்லே, எனது மூணு வயது மகளுக்கு நாளை பிறந்த நாள். நீங்க ரெண்டு பேரும் குடும்பத்தோடு கட்டாயம் வரணும்என்றான் சேவியர்.

தாயில்லாத உன் மகள் பிறந்த நாளைக்கு நாங்க கட்டாயம் வர்றோம், விருந்து சாப்பிடுறோம்என்றார் டாக்டர் இஸ்மாயில்.

ஆமா டாக்டர், நிச்சயம் வர்றோம். மதியம் நான் சாப்பிட்ட பிறகு இங்கே வந்திடுறேன்என்று சிரித்தபடி எழுந்தாள் டாக்டர் யாழினி.

(தொடரும்)