கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பட்டுவம் கிராமத்தில், கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அருள்சகோதரி பிரான்சிஸ் டிசம்பர் 30 அன்று 74 வயதில் இறந்தார். அருள்சகோதரி பிரான்சிஸ் 1969 -ஆம் ஆண்டு அவர் சபையில் சேர்ந்த பிறகு, தனக்குப் பிடித்த புனிதரான புனித பிரான்சிஸ் அசிசியின் பெயரை தனது பெயராகத் தேர்ந்தெடுத்தார். 1975 -ஆம் ஆண்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் பேட்ஜைப் பெற்றவர் தன் வாழ்க்கையில் பல மாவட்டங்களில் மருத்துவப் பணியாற்றினார். நள்ளிரவில் கூட ஏழை நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் தயாராக இருந்தார். அருள்சகோதரியின் இறப்பு பெரும் இழப்பாகக் கருதப்படுகின்றது.