news-details
இந்திய செய்திகள்
புத்தகத்தைப் படித்து அதில் கூறும் அறத்தின் வழி செயல்படுதல் வேண்டும்

புத்தகங்களைப் படிப்பவர்கள் அதில் உள்ள கருத்துகளை உள்வாங்கி வாழ்க்கையில் செயல்படுவதில்லை. படித்தவர்கள், தாம் கொண்ட கருத்தில் மாற்றுக்கருத்து உடையவர்களையும் கேட்டுச் செயல்படுவதற்கு வள்ளுவர் வழிகாட்டியுள்ளார். ஆனால், தற்போது மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையுள்ளோர் குறைந்துவிட்டனர். புத்தகம் படிக்கத் தெரிந்தவர் மனிதராகவும் படிக்கத் தெரியாதவரை விலங்காகவும் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். புத்தகத்தைப் படித்தால் மட்டும் போதாது, அதில் கூறும் அறத்தின் வழி செயல்படுவதே சிறந்ததாகும்.”

- பேச்சாளர் திரு. சுகி சிவம்