news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.01.2025)

செபம் நமது இதயத்தைத் தூய்மையாக்குகின்றது; அதன் பார்வையை ஒளியூட்டுகின்றது, எதார்த்தத்தை அதன் ஒரு நிலையிலிருந்து மாற்றி, மறுநிலையிலிருந்து பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.”

- டிசம்பர் 16, செப ஆண்டுஎக்ஸ்தளப்பதிவு

தங்களது குற்றங்களைக் கண்டறிந்து களைய முற்படுபவர்கள், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையிலிருந்து விடுபட்டு, இதயங்களின் ஒற்றுமையை உருவாக்கும் ஒரே கடவுளின் செயலுக்கு இடமளிக்கிறார்கள்.”

- டிசம்பர் 21, உரோம் கியூரியா சந்திப்புச் செய்தி

இம்மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் ஒரு தவறு அல்ல; மாறாக, வாழ்வின் கொடை; ஆகவே, எலிசபெத்தைப் போல வயிற்றில் குழந்தையைச் சுமந்து ஆவலுடன் காத்திருக்கும் கருவுற்ற தாய்மார்களின் அழகை வியந்து போற்றுவோம்; இறைவனுக்கு நன்றி கூறுவோம்.”

- டிசம்பர் 22, வத்திக்கான் மூவேளைச் செப உரை

யூபிலி என்பது தனி மனிதர்களாகவும் சமூகமாகவும் நாம் நமது வாழ்க்கையின் பொன்னான நேரங்களைக் கணக்கிடுவதற்கான காலம்; இது தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுத்து வாழ்வதற்கான அழைப்பின் காலம்.”

- டிசம்பர் 23, ‘எக்ஸ்தளப்பதிவு

இயேசுதாம் அமைதியின் கதவு. பலமுறை நாம் அந்தக் கதவின் நுழைவாயிலில்தான் நிற்கிறோம். ஆனால், அதைக் கடக்க நமக்குத் துணிவு இல்லை, ஏனென்றால் அது நம் வாழ்க்கையை ஆன்ம பரிசோதனை செய்துபார்க்க நமக்குச் சவால் விடுகிறது.”

- டிசம்பர் 25, Urbi et Orbi