news-details
இந்திய செய்திகள்
மருத்துவ அலுவலராகப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்சகோதரி

பிப்ரவரி 15 அன்று,  கேரள அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக அருள்சகோதரி சென் ஜீன்ரோஸ் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள பெருநிலை மாமன்றமும் கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையும் முன்வைத்தஅருள்சகோதரிகளின் குரல்என்ற திட்டத்தின்படி, ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரோசம்மா தாமஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படும் ஜீன்ரோஸ், பெங்களூருவில் உள்ள புனித ஜான் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மற்றும் மயக்கவியல் துறையில் கல்வி பயின்று, 10 ஆண்டுகளுக்கு மேல் மறையூரில் உள்ள சர்ச் மேனேஜ் மருத்துவமனையில் பணியாற்றியவர். கேரள அரசு பணியாளர் ஆணையம் தேர்வில் வெற்றி பெற்ற இவர், மறையூர் பகுதியின் பழங்குடி மற்றும் ஏழை சமூகங்களுக்குச் சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.