news-details
கவிதை
அருள்செய் லூர்தம்மே...!

விண்முடிசூழ்  நீள்()க்கச்சை தேவமகளாகி

                தாளடியால் மண்ணளந்து விண்ணரசியாய்

தண்குளிரும் வான்உடுகுகள் கதிர்நிலவை

கால்பதித்து செங்கைஇரு குவித்தவளாய்

கண்ணுயர்த்தி கைதொழுதிட்டபெர்ந்தெத்தெனும்

                அருமகளைக் காட்சிக்கண்  தருகற்பகமே!

விண்ணவர்கள் படைசூழ குன்றணையாய்

                வானரசியே! எனக்கருள்செய்லூர்தம்மே

மல்லிகையும் முல்லையும் மணக்கும் மலைமுடி

                மருமலரே! அருங்கொடியே லூர்துஅம்மே

அள்ளித்தரும் அருளூற்றை அளிக்கும் பாங்கில்

                ஆங்காங்கேகெபிகொண்ட அன்னைப் பேறே

துள்ளிவந்தபெர்ந்தத்திடம்செபிக்க வேண்டி

                துடிக்குமிதயம் மகிழவேண்டி காட்சி தந்தாய்.

புள்ளிகொண்ட லூர்தன்னையே! பண்பின் அம்மே!

                பக்தர்எம் வேண்டல்கள் தீரு மம்மே!