news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கல்வி உள்ளிட்ட அனைத்திலும் செவித்திறன், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றம் அடைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை. மாற்றுத் திறனாளிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களின் செயல்பாட்டை மேம்படுத்த .. உள்ளிட்ட இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூகத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்.”

- மாண்புமிகு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (..) ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அதில் நாம் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. மருத்துவத்துறையிலும் .. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், இது நோய்களைக் கண்டறிந்து சிறப்பான சிகிச்சை வழங்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், இதை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்தத் தொழில்நுட்பங்களை அரசுகளால் மட்டுமே வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது; பெருநிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு அவசியமானது.”

- உயர்திரு. பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு 

வரலாற்றைப் பதிவு செய்வது அவசியம்; இன்றைக்கு நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் பத்து ஆண்டுகளுக்குத் தவறாகப் பதிவு செய்வர். இந்தியர்களும் தமிழர்களும் வரலாறு படைத்தனர்; ஆனால், அவற்றை முறையாகப் பதிவு செய்யத் தவறிவிட்டனர்.”

திரு. வே. இராமசுப்பிரமணியன், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்

மதநெறி தேவை; ஆனால், மதவெறி கூடாது. பழைய மூடப்பழக்கவழக் கங்களையும் நம்பிக்கைகளையும் தகர்க்க வேண்டும். சாதி என்பது ஒரு சதி; சாதியும் மதவெறியும் சமூகத்திற்கு அழிவையே உண்டாக்கும்.”

திரு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

தமிழக வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது; பெண்கள் சமூகத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகின்றனர்.” 

- டாக்டர் சுதா சேஷய்யன், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத் துணைத் தலைவர்