வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்சகோதரி Raffaella Petrini அவர்களை வத்திக்கான் மாநிலத்திற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும், நகர நிர்வாகத் துறைத் தலைவராகவும் திருத்தந்தையால் பணியமர்த்தப் பட்டுள்ளார். Francesca di Giovanni, Nathalie Becquart, Alessandra Smerilli ஆகிய அருள்சகோதரிகளும், Barbara Jatta, Natasa Govekar, Cristiane Murray போன்ற பெண் பொதுநிலையினரும் திருத்தந்தையால் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.