news-details
தமிழக செய்திகள்
மகிழ்ச்சியான செய்தி! - சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ‘TET’ அவசியமில்லை!

தமிழ்நாடு அரசு, சிறுபான்மையினர் பள்ளிகளில் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) கட்டாயமாக்கல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுக்களைத் (Special Leave Petition –SPL) திரும்பப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ளதால், இதன்மூலம், சிறுபான்மையினர் பள்ளிகளில் TET இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலும், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த SLP-களைத் திரும்பப்பெற்றதன் மூலம், 15.11.2011 முதல் 12.01.2023 வரை TET இல்லாமல் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைவார்கள். 

இந்த வழக்கில் மேமிகு சென்னை-மயிலைப் பேராயர் முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் வழங்கிய வழிகாட்டல் மற்றும் உடனிருப்புக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அருள்பணி. அந்தோணிசாமி, (செயலாளர் -TANCEAN) அவர்களுக்கும், சட்டப் பணிகளை மேற்கொண்ட மூத்த சட்ட ஆலோசகர் முனைவர் A. சேவியர் அருள்ராஜ் அவர்களுக்கும், அருள்சகோதரி அருள்மேரி மற்றும் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்ட சட்ட வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.        

- TANCEAN & சட்டப் பணி தமிழ்நாடு ஆயர் பேரவை