news-details
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ, மாணவியர் அறிந்துகொண்டு, கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிகுந்தவர்களாக விளங்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்குத் திருக்குறளை மனனம் செய்தல், அது குறித்துப் பயிற்சி அளித்தல் மற்றும் கருத்தமர்வுகளில் பங்கேற்கச் செய்தல் என ஊக்குவிக்க வேண்டும்.”

- உயர்திரு. ஒளவை . அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்

உலகில் பல மொழிகள் வழக்கொழிந்து போனாலும், இன்றளவும் தனித்து இயங்கும் மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது. உலகில் இரும்பின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதால், உலகின் இரும்பு மனிதனாகத் தமிழன் திகழ்கிறான். தமிழன் என்ற பெருமை நாவளவில் மட்டுமில்லாமல், உணர்விலும் கொண்டு வாழ்வியலில் தனித்தமிழைப் பழக  அனைவரும் முன்வர வேண்டும்.”

- உயர்திரு. கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

வழக்குரைஞராகப் பணிபுரிபவர்கள் மூன்று கடமைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தன்னிடம் வரும் வழக்காளியிடம் வழக்கின் தன்மை, வழக்கை நடத்துவதால் கிடைக்கும் நன்மை குறித்து விளக்க வேண்டும்; வழக்கில் எதிராளியாக உள்ளவருக்கு அவரது வழக்குரைஞர் மூலம் வழக்கின் தன்மையை விளக்க முயற்சிக்க வேண்டும்; நீதிமன்றத்திற்கும் உண்மையுடன் செயல்பட வேண்டும். இந்த மூன்றும் அறம் சார்ந்து இருக்க வேண்டும்; ஒரு நல்ல சமுதாயம் அமைய குற்றவியல் வழக்குகள் குறைந்து, உரிமையியல் வழக்குகள் பெருக வேண்டும்.”

- உயர்திரு. எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதி