news-details
கவிதை
மதுரைப் பேராயர் வருகவே! ‘சாமி முத்தே!’

குற்றாலச் சாரல்மழை குளுமைப் பேச்சில்,

    நெல்லைத்தமிழ் மணப்பா(ங்)கு ஆளுமை வீச்சில்,

(கீ) வண்டானம் சுற்றிநீதிமான்போல் பனைசெழிக்கும்

    சிற்றாலைகள் கிணற்றுநீரால் பாசனம் கொழிக்கும்

நெய்தல்தவிர்த்து நாலுவகை ஒருங்கமை பூமி!

    அத்தைஅருள் சகோசெசிலியின் குரு! வா! ஊக்கம்!

அந்நாள்பணி ஆரோக்கிய சாமியின் ஈர்ப்பு

    இந்நாள்நீயீர் மதுரைப்பேர் ஆயர்காப்பு!

பாளை(யின்)பாது காவலரின் வழிப்பா தையில்நீர்!

    மநாயக் கன்பட்டி அன்னையில் மடியும்

பாளைமடல் விரிந்தேற்கும்புளியைப் புனிதரும்

    ‘தமிழ்வையையில் தலைமையேற்க வைத்தார் இனிதே!

காளை போலத் துடிப்பு! ‘இருத யராஜ்வின் பாங்கு (பான்மை)

    ஏழ்மை இனிமை! ஆன்மிக வளர்ச்சி! மேன்மை

கோல்வழுவா (நெடு) செழியன்நகர் உம்செங் கோண்மை!

    கைகுவிக்கும்! வைகையே!இனி எழுந்து கூடலில்!

கொன்சால் வாஸ்திரு அவையைநட்டபூமி!

    தமிழ்சந்நியா சிபோல்வாழ்ந்த தத்துவர் பூமி!

நம்பிக்கையால் வேதியர்கள் மறைப்பணி செய்தார்

    மன்னர்களும் உவந்துபோற்றிய ஆன்மிகப் பூமி

பன்னாட்டார் வணிகநோக்கில் மறைப்பணி வளர்த்தார்!

    ஒருத்திக் கொருத்த தமிழ்பண்பைச் சொன்னஆனந்தர்

 பனுவல் நூல் பலகண்டபெஸ்கிமுனிவர்

    பல் பணியால் தடைகடந்து உயர்ந்தார்! அன்றே!

அறுபதாண்டுகள்பதுரவதோவிசுவாச ஆணையம்

    அருமாந்த திரு அவையில் தீயவை குழப்பம்

புதுமறைதிரு அவைபிறக்கவே மதுரைச் சீமை

    மறைமாவட்டம் மறைமாநிலம் பிறந்தது கேளீர்!

அருமை மிகு அலக்ஸ் காளோஜ் அதிபர்! வித்து!

    பின்னாளிலும்திருச்சி, மதுரைமுதலாயர் சொத்து

சிறப்புடையஜான்பார்த்தேஅகஸ்டீன் பெசாந்த்

    ‘லியோர்னாடுவழிமுறைஆயர்இறைப்பணி முகிழ்ந்து!

சாதீயத் துதடுப்புச் சுவர்ஒழித்தலியோர்னாடு

     ‘செம்மறிப்பார் வைசிங்கத் துணிவில்திரவியம்

காட்சிக்கெளியர், அறிவியலாளர், ‘ஞானா திக்கம்

    ஐக்கியசிறு பான்மை குரல்மரியானுஸ் ஆரோ

தூரநோக்கு, தொடர் முயற்சி, உளவியல்பெர்னாண்டோ

    விவிலியத்து சுவடிபொருள் கை ‘(கோ) பாப்பு சாமி

ஈரம் நிறை, ஏழ்மைஇனிமைகிறித்துவின் மதிப்பில்

    சங்கம்வளர் மதுரைப்பேராயர்! வருகசாமி முத்தே!!’