news-details
இந்திய செய்திகள்
கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் புதிய வாரிசு பேராயர் எலியாஸ் பிராங்க்

1962, ஆகஸ்டு 15 கர்நாடகாவின் பந்த்வாலில் பிறந்த எலியாஸ் பிராங்க் மங்களூரு மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். 1993, ஏப்ரல் 23 அன்று கொல்கத்தா மறைமாவட்டத்திற்குக் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். இவரைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023, ஜூலை 3 அன்று அசன்சோலின் ஆயராக நியமித்தார். 2023, ஆகஸ்டு 24 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்த அவர் தற்போதைய கொல்கத்தாவின் பேராயர் தாமஸ் டிசோசாவுக்கு உதவியாகவும், அவருடைய பணிக்காலத்திற்குப் பின் பேராயராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.