1962, ஆகஸ்டு 15 கர்நாடகாவின் பந்த்வாலில் பிறந்த எலியாஸ் பிராங்க் மங்களூரு மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். 1993, ஏப்ரல் 23 அன்று கொல்கத்தா மறைமாவட்டத்திற்குக் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். இவரைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023, ஜூலை 3 அன்று அசன்சோலின் ஆயராக நியமித்தார். 2023, ஆகஸ்டு 24 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்த அவர் தற்போதைய கொல்கத்தாவின் பேராயர் தாமஸ் டிசோசாவுக்கு உதவியாகவும், அவருடைய பணிக்காலத்திற்குப் பின் பேராயராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.