news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (03.08.2025)

சமூக அநீதிகளை எதிர்கொண்டு, தீமை மற்றும் சோதனைக்கு அடிபணியாமல், போர் மற்றும் வன்முறை நிறைந்த இக்காலத்தில் உண்மையில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும்.”

- ஜூலை 14, காஸ்தல் கந்தோல்போ காவலர் சிற்றாலயத்தில் திருப்பலி

போட்டி என்பது எதிர்த்து நிற்கும் செயலாக இருந்தாலும், எதிராளிகளைக்கூட ஒன்றிணைக்கும் ஒரு மோதல்களமே விளையாட்டு.”

- ஜூலை 15, ‘Partita del Cuoreகால்பந்தாட்டப் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் அனைத்து மக்களும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களுடன் பொதுத்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

- ஜூலை 18, இஸ்ரயேல் பிரதமருடன் தொலைப்பேசி உரையாடல்

விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இரக்கம் பெறவும், தூய இறைவனின் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதியுடன் இறையாசிரை நாம் பெறவும் இறைவேண்டல் செய்வோம்.”

- ஜூலை 19, ஈராக்கின் குட் பகுதி தீ விபத்து இரங்கல் செய்தி

சேவை செய்வதும் செவிமடுப்பதுமே நம்மை இறைவனின் இதயத்தில் இணைக்கின்ற திறன்களாகும்.”

- ஜூலை 20, அல்பானோ பேராலய ஞாயிறுத் திருப்பலி