news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

காமராசருக்குப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக 12,000 பள்ளிக்கூடங்களைத் திறந்தார். காமராசர் அமைத்த அடித்தளத்தால்தான் தற்போது தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது.  பட்டியலின மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும் என்பதற்காகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக்கினார். அரசியலில் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் காமராசர்.”

- உயர்திரு. முனைவர் கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

மாணவர்கள் நலம் சார்ந்த பல்வேறு கல்வித் திட்டங்களை அமல்படுத்துவது அரசின் கடமை. இந்திய அளவில் நடத்தப்படும் பல போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கல்வித் தரம் உயர்ந்தால்தான் அது சாத்தியமாகும். அறிவார்ந்தவர்கள் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள். ஆனால், அவர்களை நல்ல வகையில் வழிநடத்தவேண்டும். மாணவர்களின் திறமைகளையும் ஆளுமையையும் வளர்ப்பதுதான் கல்வித்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். உண்மையான தீர்வுக்கு நாம் கல்வியை எவ்வாறு பார்க்கிறோம், அதிலிருந்து நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதில் சமூக விழிப்புணர்வு தேவை.”

- உயர்திரு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

கல்வி நிலையங்களை அமைக்க அரசியல் கட்சிகள் முன்வந்தால் நாம் வரவேற்க வேண்டும். வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்களைப் போதிக்க தேர்தல் ஆணையம் உள்பட யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. அதேநேரம், எந்த ஓர் அரசியல் கட்சியும் தீண்டாமையை ஊக்குவித்தால், அது கண்டிப்பாகக் குற்றமே! மஜ்லிஸ் கட்சியின் விதிமுறைகளின்படி சிறுபான்மையினர் உள்பட சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்காகப் பணியாற்றுவதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்குச் சில குறிப்பிட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ‘வகுப்புவாதத்தைத் தூண்ட மாட்டோம்என்ற உறுதிமொழியை ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளரோ மீறும் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆகவே, வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே சாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்குச் சமமான அளவில் ஆபத்தானவை.”

- உச்ச நீதிமன்றம், புதுடெல்லி