news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.07.2025)

இயேசுவைப்போல் மிகச்சிறியோர், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் குரலுக்குச் செவிமடுக்க ஒருநாளும் மறவாதீர்கள்.”

- ஜூன் 24, 4000 குருத்துவ மாணவர்கள் சந்திப்பு

எதார்த்தமான வாழ்வானது மிகவும் சிக்கலானதாகவும், எதிர்கொள்ளக் கடினமானதாகவும் நமக்குத் தெரிவது ஒரு பரவலான நோயாக இருக்கின்றது.”

- ஜூன் 25, புதன் மறைக்கல்வி உரை

தீமையிலிருந்து விலகி நிற்பவர்கள் வழியாகக் கடவுள் பெரிய காரியங்களைச் செய்கிறார்.”

- ஜூன் 26, அனைத்துலகப் போதைப்பொருள் ஒழிப்பு தினவிழா

இயேசுவின் திரு இதயத்தில் மட்டுமே நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக, நமது உண்மையான மனிதகுலத்தைக் காண்கிறோம்.”

- ஜூன் 27, இயேசுவின் திரு இதயப் பெருவிழா

கடவுள் நம்முடன் இருக்கிறார், தமது இறுதி வார்த்தையை உச்சரிப்பார், வாழ்வானது இறப்பை வெல்லும் என்று நம்புவதே உண்மையான நம்பிக்கையாகும்.”

- ஜூன் 28, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருப்பயணிகள் சந்திப்பு

பிளவுபட்ட இந்த உலகில் திரு அவையானது ஒன்றிப்பிற்கான ஓர் இல்லமாகவும் பள்ளியாகவும் இருக்கும்.”

- ஜூன் 29, புனித பேதுரு-பவுல் பெருவிழா