ஜூலை 18, வெள்ளிக்கிழமை திருத்தந்தை 14-ஆம் லியோ இஸ்ரேல் இராணுவத்தால் காசாவின் திருக்குடும்பக் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளானதை முன்னிட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அங்கு நிலவி வரும் சூழல் குறித்து அறிந்துகொண்டார். காசாவில் உள்ள மக்களின் மனிதாபிமான நிலைமை குறித்துக் கவலை தெரிவித்த திருத்தந்தை குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் போரினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.