இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே, அக்டோபர் 2022-துவங்கி அக்டோபர் 2025-வரை நாம் இணைந்து பயணித்த ஒருங்கியக்கப் பயணம் நமக்கு உணர்த்திய தலையாயப் பாடம் என்ன? எதிர் வரும் மூன்றாவது ஆயிரமாண்டின் திரு அவையின் வாழ்வியல், அடையாளம், மற்றும் மறைப்பணி அனைத்திற்கும் அடித்தளமாக அமைவது கூட்டு ஒருங்கியக்கமே. ஆனால், ஒருங்கியக்கத் திரு அவை என்றால் என்ன? இறைவன் தம் திரு அவைக்கு விரும்பும் ஒருங்கியக்கத் திரு அவை Synodal Church-ஐ விவரிப்பதற்கு ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கை ஓர் அழகான உருவகத்தைப் பயன்படுத்துகிறது. அறிக்கையின் பகுதி 1 எண் 42 குறிப்பிடுகிறது, ஒருங்கியக்கத் திரு அவை என்பது பல்வேறு இசைக்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து படைக்கும் இன்னிசையைப் போன்றது. வெவ்வேறு தனித்தன்மைகளைக் கொண்ட இசைக்கருவிகளும், வேறுபட்ட குரல் வளங்களைக் கொண்ட இசைக் கலைஞர்களும் தங்கள் தனித்தன்மை மாறாமல் ஒன்றாக இணைந்து செவிக்கு இனிமையான இசையைப் படைக்கின்றனர்.
அதுபோலவே,
பல்வேறு இயல்புகள், கருத்தியல்கள், தனித்துவங்கள், வாழ்வுமுறைகளைக் கொண்டோர் இணைந்து உருவாக்குவதே ஒருங்கியக்கத் திரு அவை. A synodal Church is like an orchestra, where women are not just
accompanists but lead as conductors, composers, and first violinists in God’s
symphony of grace. தனித்
தன்மையும் ஒற்றுமையும் இணைந்த இந்த ஒருங்கியக்கத் திரு அவையின் கனவு நிதர்சனமாக வேண்டுமெனில் திரு அவையில் ஒரு பாதியாகத் திகழும் பெண்களின் குரலும் பங்களிப்பும் திரு அவையின் வாழ்வியலில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு ஆயர்கள் பேரவையின் கூட்டம் இந்த முக்கியமான காலத்தேவையை முன்னிறுத்துகின்றது.
பெண்களின்
பங்களிப்பைக் குறித்த சிந்தனைக்கு ஆயர்களின் மாமன்றத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு எது என்ற கேள்வியோடு தொடங்க விரும்புகின்றேன். The Synod’s final document stands out for its honest
acknowledgment of the Church’s past failure to recognize women’s dignity and
significance. பெண்களின்
மகத்துவத்தையும் பங்களிப்பையும் தகுந்த முறையில் திரு அவை ஊக்குவிக்கவில்லை என்ற ஒப்புதலே என்னைப் பொறுத்தவரை இந்த ஆவணத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு. ஆவணத்தின் முன்னுரை எண்கள் 6 மற்றும் 16 ஒப்புக்கொள்வதுபோல, பெண்களின் சவால்களையும், அவர்களது கனவுகளையும் முன்னிறுத்த நாம் தவறியிருக்கின்றோம்.
The document
acknowledges the Church’s ‘sinful realities’; ignoring women’s charisms,
limiting their roles, and the widespread pain of exclusion. பெண்கள் நூற்றாண்டுகளாக அனுபவிக்கும் புறக்கணிப்பின் வலி, திரு அவையில் தலைமைத்துவம் மற்றும் உரிமைக்கான தேடல், பெண்களது திறமைகள் கொடைகள் மற்றும் இறையழைத்தலின் மாண்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவது ஒருங்கியக்கத் திரு அவையின் தலையாயக் கடமை என்கிறது ஆவணம். இந்தக் கடமையை நிறைவேற்ற நமக்குத் தேவைப்படுவது ஒருங்கியக்க மனமாற்றம். The synodal journey requires conversion (Introduction, 6). We
must dismantle systems that silence women’s voices and diminish their gifts.
The Synod moves
beyond words, proposing a synodal feminist approach. மன்றத்தின் ஆவணம் ஒருங்கியக்கப் பெண்ணியல் சிந்தனையை முன்வைக்கின்றது. இன்று பெண்ணியல் சிந்தனை என்பது கத்தோலிக்க நம்பிக்கைக்கு முரணானது என்னும் பொதுவான விமர்சனத்தை நாம் காண்கின்றோம். குறிப்பாக, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில், பெண்ணியம் திரு அவையின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்று எச்சரிக்கும் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த நிலைமை? பெண்ணியல் சிந்தனை என்பது உரிமைக்கான போராட்டம் என்ற உண்மையை மறந்து வெறும் கருத்தியல் மற்றும் அரசியல் சார்ந்த விவாதப் பொருளாகச் சுருங்கிவிட்டதே இதற்குக் காரணம். ஆயர்களின் மாமன்றம் முன்னிறுத்தும் பெண்ணியல் சிந்தனை என்பது சித்தாந்தங்களை மையமாகக் கொண்டது அல்ல; மாறாக, நமது நம்பிக்கையிலும் மறைப்பணியிலும் வேரூன்றிய தேடல்.
The Synod’s vision
for women rejects secular ideologies, grounding its feminist approach in faith
and pastoral urgency. மாமன்றம்
முன்னிறுத்தும் பெண்ணியல் சிந்தனை நமது ஒருங்கியக்கத் திரு அவையின் கனவிற்குத் தொடுக்கும் கேள்விகள் இவை: கிறிஸ்துவின் உடலாகிய திரு அவையில் பெண்களின் விடுதலை, மாண்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை நடைமுறையில் வளர்ப்பது எவ்வாறு? இன்று திரு அவையில் பெண்கள் அனுபவிக்கும் சவால்கள், அநீதி மற்றும் புறக்கணிப்புக் கட்டமைப்புகளை மாற்றுவது எவ்வாறு? திரு அவையிலும் சமூகத்திலும் பெண்கள் தங்கள் சுயமரியாதையை, உரிமைகளை, பங்களிப்பைத் தாங்களாகவே உறுதிப்படுத்துவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்கு நாம் பதில் தேடப்போவது எங்கு? கருத்தியல் மோதல்களில் அல்ல; மாறாக, நற்செய்தியின் வழிகாட்டுதலில். The vision of a synodal inclusive church is not rooted in external
ideologies but the Gospel.
எனது
கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். திரு அவை தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்றைய பெண்ணியல் சார்ந்த கருத்துச் சிந்தனைக்கு நமது செவிகளை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. மாறாக, நமது நம்பிக்கையிலும் வரலாற்றிலும் களப்பணியிலும் வேரூன்றிய ஒரு மாற்றுப் பெண்ணியல் சிந்தனையை இந்தச் சமூகத்திற்கு முன்வைப்பது நமது கடமை என்பதே நமது வாதம். இன்றைக்குப் பெண்ணியம் என்ற போர்வையில் கருச்சிதைவை நியாயமாக்கி, பெண்களின் தனித்துவத்தைப் புறக்கணித்து, குடும்பத்தின் மாண்பை மறுதலித்து, ஆண்-பெண் உறவை அதிகாரத்திற்கான போராட்டமாக (Power-struggle) சித்தரிக்கும்
சிந்தனைகளுக்கு மாற்றாக நாம் வழங்கப்போகும் ஒருங்கியக்கத் திரு அவையின் மாற்றுப் பெண்ணியல் சிந்தனை என்ன? அதற்கான அடித்தளங்கள் என்ன? ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கை சில கோட்பாடுகளை அடித்தளங்களாக முன்வைக்கின்றது:
1. படைப்பின்
அடிப்படையிலான கிறித்தவ மானுடவியல் (Christian Anthropology based on creation): மாமன்றத்தின் இறுதி அறிக்கைப் பகுதி 2 எண் 52 வலியுறுத்துவதுபோல, ஆண்-பெண் சமத்துவத்தின் அடிப்படைத் தொடக்கநூல் 1:27 எடுத்தியம்பும் படைப்பின் தன்மை: “கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். ஆணும்-பெண் ணுமாக அவர்களைப் படைத்தார்”.
ஆணும்-பெண்ணும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டதால் இருவரும் சம மாண்பிற்கும் உரிமைக்கும்
உரியவர்கள். The Final Document affirms that women are not an “add-on” but
integral to the Synodal Church, reflecting a complementary, enriching Christian
vision. படைப்பில்
பார்வையில், பெண்கள் வெறும் ‘கூடுதல் சேர்க்கைகள்’ அல்ல;
அவர்கள் திரு அவையின் அடிப்படையான சாரத்திற்கே இன்றியமையாதவர்கள்.
2. திருமுழுக்கின்
சமத்துவ அழைப்பு (Women’s equality as a Baptismal reality) இறுதி அறிக்கைப் பகுதி 2 எண் 60 கூறுகின்றதுபோல, “திருமுழுக்கின் மூலம், கடவுளின் மக்களாகிய பெண்களும் ஆண்களும் சம மாண்பினைப் பெற்றுள்ளனர்.”
இந்தச் சம மாண்பு என்பது
பெண்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல; மாறாக, இறைத்திட்டத்தின் வெளிப்பாடு. ஆவணம் கலாத்தியர் 3:27-28 வசனங்களை நினைவுபடுத்துகின்றது: “கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.” The sacrament of baptism endows all of us with the same diginity
of Christ.
3. பெண்
உரிமைக்கான குரல் ஒட்டுமொத்தத் திரு அவையின் குரல் (Synodal Feminism is deeply Ecclesial): மாமன்றத்தின் அறிக்கைப் பகுதி 2, எண் 60 குறிப்பிடுகின்றதுபோல, இன்று திரு அவையில் பெண்களின் ஆளுமைத்திறன் நமது பங்குத்தளங்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில் மற்றும் சமூகப்பணியில் பெறும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. நமது ஆலய நிகழ்வுகளில் பெரிதும் பங்கேற்பது பெண்களே. குடும்பங்களில் நம்பிக்கையின் முதல் சாட்சிகளாகத் திகழ்வது நமது தாய்மார்களே. என்றாலும், அவர்களது உரிமைக்கும் மாண்புக்கான போராட்டம் ஏனோ பெண்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினையாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதை ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது.
The Final Document
affirms that women\'s inclusion is not a separate issue, but vital to the good
of the whole People of God. பெண்கள்
வளர்ச்சியடையும்போது,
திரு அவையும் முழுமையாக வளர்ச்சியடைகின்றது. பெண்களின் புறக்கணிப்பும் மறுதலிப்பும் நம் அனைவரையும் பலவீனப்படுத்துகிறது. Marginalizing women weakens the Church and dims Christ’s
presence. Their leadership enriches discernment and calls for reform. As the
document says, “What comes from the Holy Spirit cannot be stopped.”
The Witness of the synod Experience: 2022 முதல் 2025 வரை நாம் மேற்கொண்ட ஒருங்கியக்கப் பயணம் பெண்களின் பங்களிப்பின் சிறப்பையும் மகத்துவத்தையும் நமக்கு நினைவுபடுத்தியிருக்கின்றது.
வரலாற்றில் முதன்முறையாக, ஆயர்கள் மாமன்றத்தின் பொதுக்குழுவில், முழு உறுப்பினர்களாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (எண் 6b). இது வெறும் அடையாளப் பங்கேற்பு அல்ல; ஒட்டுமொத்தத் திரு அவையின் வாழ்வியலில் பெண்கள் இன்றியமையாதப் பங்கை வகுப்பவர்கள் என்பதை அங்கீகரிக்கும் உறுதியான நடவடிக்கையாக இது அமைந்தது. அவர்களின் குரல்கள், அனுபவங்கள் மற்றும் அறிவுச்செழுமை மாமன்றத்தின் உரையாடல்களுக்கும், மாமன்றத்தின் இறுதி ஆவணத்திற்கும் பங்களித்தது. சகோதரி நத்தாலி பெக்கார்ட் (XMCJ) அவர்களை
ஆயர்கள் மாமன்றத்தின் துணைச் செயலராக நியமித்தது மற்றுமொரு வலுவான அடையாளமாக இருந்தது.
ஆவணம்
மாமன்றத்தின் முடிவை அல்ல; மாறாக, ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தை வரையறுக்கின்றது. இந்தத் தொடக்கம் நம்மை ஒருங்கிணைந்த ஆய்ந்து அறியும் தேடலுக்கும், ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கும் அழைக்கின்றது. எதிர்வரும் ஒருங்கியக்கப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட மாமன்றத்தின் இறுதி ஆவணம் உணர்த்தும் அதன் வழிமுறைகளைப் பட்டியலிட விரும்புகின்றேன்.
1. பகுதி
2, எண் 6 - திரு அவையின் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (Implement Canon Law): பெண்களின்
ஆளுமைக்கான தற்போதைய விதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல் (எ.கா: diocesan
curia, pastoral councils, finance committees).
2. பகுதி
2, எண் 6 - உள்ளடக்க மொழியைப் பயன்படுத்துதல் Inclusive language: மறையுரை,
மறைக்கல்வி, மறைபரப்புப் போதனை மற்றும் திரு அவையின் ஆவணங்களில் பெண்களின் பங்களிப்புகளை மையப்படுத்துதல். பெண் புனிதர்கள், இறையியலாளர்கள், சிந்தனையாளர்கள், அருளாளர்கள் மற்றும் மறையாளர்களின் பங்களிப்பை விவரித்தல்.
3. பகுதி
2, எண் 76 - புதிய மறைப்பணிகளைக் கண்டறிதல் Expand ministries: பொதுநிலையினருக்குரிய
மறைப்பணியின் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, செவிமடுத்து வழிநடத்தும் மறைப்பணிக்குப் பெண்களை நியமித்தல். Discern new forms of lay ministry, including the proposal for a
“ministry of listening and accompaniment”
4. பகுதி
2, எண் 6 - திருத்தொண்டர் பணி பற்றிய ஆய்வு: Continue discernment on women’s access to the diaconate grounded
in theological and historical dialogue. பெண்களின்
திருத்தொண்டர் பணி குறித்த வரலாற்று மற்றும் இறையியல் சார்ந்த சிந்தனை தொடரவேண்டும். எனினும், பெண்களின் பங்கேற்பைக் குறித்த சிந்தனையைக் குருத்துவத் திருத்தொண்டர் அருள்பொழிவிற்கு நாம் சுருக்கி விடக்கூடாது.
5. பகுதி
5, எண் 148 - கூட்டுப் பங்களிப்பிற்கான உருவாக்கம்: Formation for Co-responsibility: எதிர்கால குருக்கள்,
திருத்தொண்டர்கள் மற்றும் ஆயர்களின் உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்தல்.
In conclusion, my
reflections can be summarized in five key phrases:
Repentance starts the
journey – Acknowledge past neglect to spark true synodal
conversion. Faith over ideology – Catholic feminism flows from
Revelation, not secular agendas. Theology drives action – Rooted in
complementarity, baptismal dignity, and prophetic mission. Women’s witness
is vital – Their leadership is essential to an inclusive Synodal Church. Act
with purpose – Advance women’s roles through structural and cultural
reform.
நமது
ஒருங்கியக்கப் பயணம் நம்பிக்கையின் விதைகளை விதைத்துள்ளது. பெண்களின் இன்றியமையாத மதிப்பும் அழைப்பும் திரு அவையின் அடையாளத்திற்கும் பணிக்கும் ஆணிவேர் என்பதை உணர்த்தியுள்ளது. The Final Document calls us to a synodal Church where women are
central, not marginal—guiding, teaching, advocating, and sustaining the
community with their unique gifts. ஒருங்கியக்க
இன்னிசையில் பெண்களின் குரல்களும் இனிமை சேர்க்கட்டும்.