திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை, மாணாக்கர்கள் அனைவரும் இயக்கமாகச் சேர்ந்து தங்களைச் சுற்றியுள்ள சமூக அவலங்களை உற்றுப்பார்த்து, ‘அது ஏன் நிகழ்கிறது?’ என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும், அதற்குத் தங்களால் இயன்ற செயல்பாடுகளை இளம் கத்தோலிக்க இளைஞர்கள் இயக்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.