news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல; அறிவுப்பூர்வமானது, தர்க்கப்பூர்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கானது, வெறுப்பின்பாற்பட்டது அல்ல; இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப்போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர் இனியாவது திருந்தவேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.”

- மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று நான் ஏற்றுள்ள மிகப்பெரும் பொறுப்புக்கு என் பள்ளியும் ஆசிரியர்களுமே காரணம். பள்ளியில் கற்ற கல்வியும் ஒழுக்கமும் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளன. பொதுமேடைகளில் பேசும் துணிச்சல், பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் என் நம்பிக்கையை அதிகரித்தன. நான் தாய்மொழியில் கல்வி கற்றேன், தாய்மொழிக் கல்வி, கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்.”

- மாண்புமிகு திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவானதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றியமையாததுவகுப்பறையில் மாணவர்களை 15 நாள்களுக்கு ஒருமுறை வரிசைமாற்றி அமர வைக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதியைக் குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைப்பதோ, கருத்துத் தெரிவிக்கவோ கூடாது. மேலும், மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது. அதேபோல, மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக்கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்குத் தடை விதிப்பதுடன், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அதனுடன் மாணவர்களுக்குப் பள்ளி அளவில் வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.”

- உயர்திரு . கண்ணப்பன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்