news-details
வத்திக்கான் செய்திகள்
எதிர்நோக்கு என்னும் சுடரை அணையாமல் காக்கும் குருத்துவப் பயிற்சி - திருத்தந்தை 14-ஆம் லியோ

அருள்பணித்துவ வாழ்வுக்கெனத் தயாரித்து வரும் ஏறக்குறைய 4000 குருத்துவ மாணவர்களை யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரியும் மறைப்பணித் திரு அவையின் சேவகர்களாகவும், மீட்கும் இறைவார்த்தையை அறிவிப்பவர்களாகவும் பயிற்சி பெறும் குருத்துவ மாணவர்கள் திருப்பயணிகளாக மட்டுமல்ல, நம்பிக்கையின் சான்றுகளாகச் செயல்படுகிறார்கள் என்று அவர்களை வாழ்த்தினார்.