news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.07.2025)

இயேசுவின் புதுமையின் அடையாளம், பகிர்வின் மூலமாகத் தானேயொழிய, பேராசையால் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள விரும்புவதால் அல்ல.”

- ஜூன் 30, .நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் கூட்டம்

உக்ரேனிய மக்களின் நம்பிக்கை, அழிவின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது என்பதற்கான அடையாளம்.”

- ஜூலை 2, உக்ரேனிய கத்தோலிக்க ஆயர் மாமன்ற உறுப்பினர் சந்திப்பு

நாம் வாழ்வின் சரியான பாதையைக் கண்டுகொண்டு, கிறிஸ்து மற்றும் நற்செய்தியிலிருந்து நம்மைத் தூரமாக விலக்கிச் செல்பவை அனைத்தையும் அகற்றுவோம்.”

- ஜூலை 3, ஜூலை மாத செபக்கருத்து

வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லாரும் ஒருவரையொருவர் மதித்து வாழ்வோம்.”

- ஜூலை 4, குழந்தைகள் மற்றும் இளையோரைக் கோடை முகாமில் சந்திப்பு

வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசு கிறிஸ்துவே நமது அனைத்துக் கலாச்சார முயற்சிகளின் அளவுகோலாக இருக்கின்றார்.”

- ஜூலை 5, மறைமாநிலப் பேரவைச் சந்திப்பு

நற்செய்தியின் நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் உரியது.”

- ஜூலை 6, மூவேளைச் செபம்