திருத்தந்தை 14-ஆம் லியோ வத்திக்கானில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் இளையோர்களையும் சந்தித்து ஒருவரை ஒருவர் மதிக்கவும், தன்னைப்போலப் பிறரையும் நேசிக்கவும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லாரும் நண்பர்களாகவும் சகோதர-சகோதரிகளாகவும் இருக்க வேண்டுமெனவும் வாழ்த்தினார்.