news-details
வத்திக்கான் செய்திகள்
அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் கயானா தலைமைக்குத் திருப்பீடம் நன்றி தெரிவித்துள்ளது. அமைதி என்பது வளர்ச்சிக்கான புதிய பெயர் என்று 1967-ஆம் ஆண்டிலேயே திருத்தந்தை புனித 6-ஆம் பவுல் இறைவாக்காக உரைத்துள்ளார் என்றும், அமைதி என்பது போர் இல்லாத நிலை மட்டுமல்ல; மாறாக உடன்பிறந்த உணர்வு, ஒத்துழைப்பு மற்றும் எல்லா நலன்களையும் ஊக்குவிப்பதாகும் என்றும் கூறியுள்ளது. நீடித்த அமைதி என்பது தனிமனித மாண்பை மதிப்பதுடன், நீதியும் ஒற்றுமையும் மலரத் தேவையான சூழலை ஊக்குவிப்பது என்றும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.