news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.07.2025)

உலகைத் தெருக்களிலிருந்து பார்க்கவும், குரலற்றவர்களின் குரலைக் கேட்கவும், மரபுகளை உடைப்பதுமே பத்திரிகை.”

- ஜூலை 6, (L’Osservatore di strada) இத்தாலி இதழின் மூன்றாம் ஆண்டு

இயேசுவே திரு அவையின் படைப்பாளர், தலைவர் மற்றும் படைப்பைப் பராமரித்து அமைதியை மேம்படுத்தும் இறைவன்.”

- ஜூலை 9, படைப்பைப் பராமரிக்கத் திருப்பலி.

செயற்கை நுண்ணறிவு (AI), மனிதப் பகுத்தறிவைக் கொண்டு திறமையாகப் பணிசெய்தாலும், தார்மிகத் தேர்ந்துதெளிதல் மற்றும் உண்மையான உறவுகளை உருவாக்க முடியாது.”

- ஜூலை 10, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வழியாக ITU-க்கு வாழ்த்து

முதியவர்களின் ஞானம், விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் அவர்களின் அனுபவ வாழ்க்கை தலைமுறைகளுக்கிடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது.”

- ஜூலை 11, முதியோர் நாளையொட்டி தயாரிப்பு

செபம், இணக்கமுள்ள செவிசாய்த்தல் உள்ளடக்கிய பணிகள் அனைத்தும் தூய ஆவியாரின் கனிகள், விலைமதிப்பற்ற பரிசுகள்.”

- ஜூலை 12, துறவற சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு

நிலை வாழ்வினை உரிமையாக்கிக்கொள்ள இறப்பை ஏமாற்றுவதற்குப் பதிலாக, வாழ்வை நாம் போற்றவேண்டும்.”

- ஜூலை 13, லிபெர்த்தா வளாகத்தில் மூவேளைச் செபவுரை