“கல்வி என்பது தங்களுக்குத் தெரியாத செய்திகளைக் கற்றுக் கொடுப்பதாகும். விளையாட்டு என்பதும் கல்வியின் ஒரு பகுதிதான். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை விளையாட்டு கற்றுத் தருகிறது. தோல்விகள் இல்லையேல், முன்னேற்றம் இல்லை. மாணவர்கள் எண்ணிய இலக்கை அடைய முடியும் என்ற உறுதியுடன் கடின உழைப்பை மேற்கொண்டால், உறுதியாக விரும்பியதை அடையலாம். ஆகவே, அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.”
- உயர்திரு. எம்.எம்.
சுந்தரேஷ்,
உச்ச
நீதிமன்ற
நீதிபதி
“இந்தியாவில்
உயர் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கு உள்நாட்டு உற்பத்தி வருவாயில் 6 விழுக்காடு செலவழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கூட 2.5 விழுக்காடு மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாடு தனி நபர் வருமானத்தில் 155-வது இடத்தில் உள்ளது. வளர்ந்த நாடாக இந்தியா மாறவேண்டும் என்றால் ஒன்றிய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.”
- உயர்திரு. கோ.
விசுவநாதன்,
வி.ஐ.டி.
வேந்தர்
“ஒன்றிய
பா.ச.க. அரசு
ஏழை மக்கள்மீது ஏராளமான வரிகளைச் சுமத்தி வருகிறது. மற்றொருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்குச் சலுகைகள் வழங்கி, அவர்களுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அரசாக உள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ‘வக்பு’ வாரியச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய பா.ச.க.
அரசு பிளவுவாத அரசியலை உருவாக்கி ஒருபகுதி மக்களைத் தனிமைப்படுத்தி, தாக்குதல் நடத்தி வருகிறது. சிறுபான்மைச் சமூகங்களைத் தனிமைப்படுத்தும் வகுப்புவாத அரசியலிலும் பொய்ப் பிரச்சாரத்திலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.”
- மாண்புமிகு. பினராயி விஜயன்,
கேரள
முதலமைச்சர்