news-details
கவிதை
நாமும் உயிர்ப்போம்!

பாரோர் பாவம் போக்கிடவே

பாடு பட்டவர் உயிர்த்தாரே!      

யாரும் நினையா ஆன்மாக்களை!

என்றும் காக்க உயிர்த்தாரே!

சாவை வென்று உயிர்த்தாரே!

சரித்திர மாகி உயிர்த்தாரே!

பாவம் இன்றி உயிர்த்தாரே!

பட்டொளி வீசி உயிர்த்தாரே!

இயேசு வழியில் உயிர்ப்போமே!

இன்னல் நீங்கி உயிர்ப்போமே!

மாசு இன்றி உயிர்ப்போமே!

மாண்பு நிறைந்து உயிர்ப்போமே!

அயலான் அன்பில் உயிர்ப்போமே!

அலகை விட்டு உயிர்ப்போமே!

தயவுகாட்டி உயிர்ப்போமே!

தன்னலம் விட்டு உயிர்ப்போமே!

இறைவழி சென்று உயிர்ப்போமே!

இன்பம் பொங்க உயிர்போமே!

நிறைவாய் வாழ்ந்து உயிர்ப்போமே!

நிம்மதி அடைந்து உயிர்ப்போமே!

தீமை விட்டு உயிர்ப்போமே!

திடமனம் பெற்று உயிர்ப்போமே !

ஊமை இன்றி உயிர்ப்போமே!

உன்னத ராகி உயிர்ப்போமே!

திரு அவை வழியில் உயிர்ப்போமே!

திருந்தி வாழ்ந்து உயிர்ப்போமே!

அருமறை மகிழ உயிர்ப்போமே!

ஆண்டவர் அருளால் உயிர்ப்போமே!

பாவ மின்றி உயிர்ப்போமே!

பக்குவம் பெற்று உயிர்ப்போமே!

ஆவல் கொண்டு உயிர்ப்போமே!

அகிலம் போற்ற உயிர்ப்போமே!

தன்னைக் காக்க உயிர்ப்போமே!

தன்மொழி காக்க உயிர்ப்போமே!

தன்இனம் காக்க உயிர்ப்போமே !

தாழ்ச்சி பெற்று உயிர்ப்போமே!

பிறருக் காக உயிர்ப்போமே!

பகுத்தறி வுடனே உயிர்ப்போமே!

அறவழி வாழ உயிர்ப்போமே!

அன்பு வழியில் உயிர்ப்போமே!

புனிதர் வழியில் உயிர்ப்போமே!

புத்துயிர் பெற்று உயிர்ப்போமே!

புன்னகை சிந்தி உயிர்ப்போமே!

புகழின் உச்சியில் உயிர்ப்போமே!

அன்னைமரி வழி உயிர்ப்போமே!

அன்றாட பணிவழி உயிர்ப்போமே!

பெண்மையைப் பேணி உயிர்ப்போமே!

பேரின்பம் அடைய உயிர்ப்போமே!