news-details
இந்திய செய்திகள்
கிறித்தவ விரோத வன்முறைகள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புனித சிலுவை நர்சிங் கல்லூரியில் மாணவியைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக அக்கல்லூரி முதல்வர் அருள்சகோதரி பின்சி ஜோசப்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த கல்லூரியின் முதல்வர், மாணவியின் குற்றச்சாட்டுகள் கல்விக் குறைபாடுகளை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் மாநிலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் மற்றும் கிறித்தவ விரோத நிகழ்வுகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிரான 165 வன்முறை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இது உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.