news-details
உலக செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் மறைவு: உலகத் தலைவர்களின் இரங்கல்

உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களால் கருணை, பரிவு, ஆன்மிகத்தின் கலங்கரை விளக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் அர்ப்பணிப்பால் பெரிதும் நான் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவருடைய அன்பு எப்போதும் போற்றப்படும்.”

- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

போப்  பிரான்சிஸ் அமைதியாக உறங்கட்டும்! அவருக்கும் அவரை நேசித்த அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்!

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பியூனஸ் அயர்ஸ் முதல் உரோம் வரை ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவர வேண்டும் எனப் போப் பிரான்சிஸ் விரும்பினார். மனிதர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.”

- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்

மனிதநேயம் மற்றும் நீதியின் உறுதியான பாதுகாவலராகப் போப் பிரான்சிஸ் விளங்கினார். பழைமைவாத மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்த அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

- இரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்

போப் பிரான்சிஸ் உக்ரைனுக்காகவும் உக்ரைன் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்தவர். அவரின் மறைவு கத்தோலிக்கர்கள் மட்டுமின்றி, அனைத்துக் கிறித்தவர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

- உக்ரைன் அதிபர் வொலோ திமீர் ஸெலன்ஸ்கி

போப் பிரான்சிஸ் ஆழ்ந்த நம்பிக்கையும், அளவற்ற இரக்கமும் கொண்டவர். மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மேம்படுத்துவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்.”

- இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

பணிவையும் ஏழைகளுக்கு அன்பையும் காட்டியதன் மூலம், கத்தோலிக்கத் திருச்சபைக்கு அப்பாற்பட்டு, கோடிக்கணக்கான மக்களைப் போப் பிரான்சிஸ் ஊக்கப்படுத்தினார்.”

- ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண் டெர்லியென்

போப் பிரான்சிஸின் மனிதநேயம் ஆழமானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். அவர் காட்டிய இரக்கத்தின் நினைவு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.”

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி

அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க அயராத முயற்சிகளை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், சிறந்த நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளார். உலகமும் திரு அவையும் சிக்கலான மற்றும் சவாலான நேரத்தை எதிர்கொண்டபோது, தனது துணிச்சலான தலைமையாலும் பணிவாலும் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கான திருத்தந்தையாக அவர் இருந்தார்.”

- பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர்

நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாத வர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.”

- நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப்

போப் பிரான்சிஸ் காசாவில் இஸ்ரயேலின் இனப் படுகொலையைக் கண்டித்து, மனிதாபிமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவரது நினைவு சுதந்திரத்தை விரும்புவோரின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.”

- ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்

போப் பிரான்சிஸ் அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தின் குரலாக விளங்கினார். அவர் மாபெரும் மனித பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.”

- எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிஸி

அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதற்கான உறுதிப்பாட்டுடன் வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.”

- ஸ்காட்லாந்து பிரதமர் ஜான் ஸ்வின்னி

ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இரக்கம், அமைதி மற்றும் மனித மாண்பைக் காட்டியவர் திருத்தந்தை பிரான்சிஸ்.”

- ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின்

முக்கியமான உலகளாவியப் பிரச்சினைகளில் பகிரப்பட்ட மனிதநேயத்திற்கான காரணமாக இருந்தவர்.”

- அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ்

இரக்கத்தையும் அமைதிக்கான திருத்தந்தையின் ஆதரவையும், குறிப்பாக, புனித வெள்ளி ஒப்பந்தமும் நினைவுகூரத்தக்கது.”

- வடக்கு அயர்லாந்தின் பிரதமர் மிஷேல் நீல்

சமூக நீதி மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் திருத்தந்தையின் சிறப்பு அக்கறையை எடுத்துரைத்ததுடன், கனடாவில் உள்ள பூர்வகுடி மக்களின் சார்பாகப் பல முயற்சிகளை மேற்கொண்டவர்.”

- கனடா பிரதமர் மார்க் கார்னி

உலகளாவியத் தார்மீகத் தலைவராக விளங்கியவர்; பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையே உறவு பாலத்தைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருந்தவர்.”

- மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான திருத்தந்தை பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார். அன்பு மற்றும் மனிதநேயம் பற்றி தனது போதனைகளால் மதங்களைக் கடந்து கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.”

- உயர்திரு. இராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர், இந்தியா