news-details
தமிழக செய்திகள்
கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம்

கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவில் மார்ச் 29, 30 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. ஆறு மறைவட்டங்களிலிருந்தும் 74 பங்குகளிலிருந்தும் திருப்பயணமாக இறைமக்கள் திருப்பயணத்தில் பங்கேற்றனர். எதிர்நோக்குப் பற்றிய அறிவுரைச் சிந்தனையும், தொடர்ந்து ஒப்புரவு அருளடையாளமும் தியான மையத்தில் வழங்கப்பட்டன. பின்பு அங்கிருந்து மறைமாவட்ட யூபிலி சிலுவையை ஏந்தி இறைமக்கள் பசிலிக்காவை நோக்கி, புனிதர்கள் மன்றாட்டு மாலை இசைக்கப் பவனியாகச் சென்றனர். முதல் நாளில் திருத்தலத்தில் வட்டார முதன்மைக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இறுதி நம்பிக்கை உறுதிப்படுத்துகின்ற கண்காட்சி அரங்கிலும் மற்றும் ஒலி-ஒளிக் காட்சிகளும் இறைமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வாக ஞாயிறு அன்று மேதகு ஆயர் L. தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு இறையாசிரோடு திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வுகளை மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. அந்தோணி இயேசுராஜ், பேராலயப் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட அதிபர் பேரருள்திரு K.M.C. அருண் மற்றும் தியான மைய இயக்குநர் அருள்பணி அலெக்ஸ் அந்தோணிசாமி ஆகிய மூவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.