news-details
இந்திய செய்திகள்
திருத்தந்தையின் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் அஞ்சலி!

ஏழைகளை அரவணைத்து, ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்து, விளிம்புநிலை மக்களின் இறைவாக்கினராக வாழ்ந்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு வத்திக்கானில் இந்திய அரசின்  சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற அடக்கத் திருப்பலி நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.