news-details
கவிதை
உலகம் உய்ய செபித்தவரே!

எமதருமை திருத்தந்தையே!

உலக மாந்தரை நேசித்தவரே!

உலகத் தலைவரைச் சந்தித்தவரே!

உலகினர் உள்ளங் கவர்ந்தவரே!

பாவம் வெறுக்க பரிந்துரைத்தவரே!

பாவப்பரிகாரம் புரிய சொன்னவரே!

அனைவரையும் ஈர்க்க முயன்றவரே!

அனைத்தையும் தாழ்ச்சியுடன் ஏற்றவரே!

சமாதானம் நிலைக்கப் போராடியவரே!

சமத்துவம் காணத் துடித்தவரே!

சிறாரைக் கனிவாய் அணைத்தவரே!

சிறார் கொடுமை சாடியவரே!

குறையுள்ள யாவரையும் நேசித்தவரே!

குறையில்லா வாழ்வு வாழ்ந்தவரே!

திருப்பயணிகளாக்கித் திருப்பயணமானவரே!

வருடமொரு ஒன்றிப்பை நல்கியவரே!

வல்ல இறைவனால் வழிநடத்தப்பட்டவரே!

இந்திய நாடு காணாத பேரன்பரே!

இந்திய மக்களைக் காண ஏங்கியவரே!

நம்பிக்கை தரு நல்வாக்கினரே!

நம்பி வரும் எளியோர் பாதுகாவலரே!

ஓரங்கட்டப்பட்டோரின் நண்பரே!

ஓரிடம் நில்லாது சுற்றிச் சுழன்றவரே!

போர்களை நிறுத்தப் போராடியவரே!

வேர்களை உறுதியாக்கச் சிந்தித்தவரே!

உம் விழுமியங்களை வாழ்வாக்குவோம்!

உம் நற்செயல்களை நாளும் நினைப்போம்!

உம் ஆன்மா இறைவனில் இதம் காண

தொடர்ந்து செபிக்கிறோம்!